மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

ஆப்கன் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 800-ஐ தாண்டியது – ஐ.நா. அமைப்பு கூறுவது என்ன?

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 800 பேர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது.

6.0 அளவிலான இந்த நிலநடுக்கத்தால் ஆப்கானின் 4 மாகாணங்களில் குறைந்தது 800 பேர் மரணமடைந்திருப்பார்கள் என ஐக்கிய நாடுகள் அவையின் மனிதாபிமான விவகாரங்களின்ஒருங்கிணைப்பு அலுவலகம் (UN Ocha) கூறியுள்ளது.

குறைந்தபட்சம் 2,000 பேர் காயமடைந்திருக்கலாம், என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் தொலைதூர மலைப்பிரதேசங்களில் இருக்கலாம் என கூறுகிறது. இந்த பகுதிகளுக்கான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அணுகுவதற்கு கடினமாக இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

குறைந்தபட்சம் 12,000 பேர் நேரடியாக நிலநடுக்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் Ocha அமைப்பு கூறுகிறது.

தாலிபன் நிர்வாகம் கூறியது என்ன?

முன்னதாக ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 610 என்று தாலிபன் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

விளம்பரங்கள்

வாழ்த்துமாலை

மரண அறிவித்தல்

Test Name of the Person

Test Place

Test Date