பிரான்சில் சிறப்படைந்த ரிரிஎன் தமிழ்ஒளியின் ‘ஊரகப் பேரொளி’ 2025 கிராமிய கலை

பிரான்சில் ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சி 6 வது தடவையாக நடாத்திய ‘ஊரகப் பேரொளி” கிராமிய கலை நடனப்போட்டி – 2025 கடந்த 01.06.2025; ஞாயிற்றுக்கிழமை ஒள்னேசுபுவா பகுதியில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது. பிரதம விருந்தினர், நடுவர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் இன்னியம் இசையுடன் அழைத்து வரப்பட்டனர். வரவேற்பு விளக்கினை பிரான்சு ரிரிஎன் இணைப்பாளர் திரு. ஜெயா , பிரான்சு கிளையின் செயற்பாட்டாளர் திருவாட்டி சுபா மோகன் ஆகியோர் ஏற்றி வைத்தனர். பின்னர் அகவணக்கம் […]
சிறப்பாக நிறைவடைந்துள்ளது. தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2025

பிரான்சு மண்ணிலே தமிழ்மொழி தழைத்தோங்க உழைக்கும் அனைவரதும் ஒருமித்த பங்களிப்புடன் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2025. பிரான்சின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள 66 தமிழ்ச்சோலைகளில் பயில்வோர், மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் பயில்வோர்களுடன் தனித்தேர்வர்களுமாக 5718 மாணவர்கள் இத்தேர்வில் தோற்றியிருந்தனர். மாணவர்களின் புலன்மொழியாற்றலை மேம்படுத்தும் நோக்கோடு கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுத்தாற்றலை மதிப்பிடும் எழுத்துத்தேர்வு என வளர்தமிழ் 1 தொடக்கம் 12 வரையான வகுப்புகளுக்கான மதிப்பீட்டுத்தாள்களைத் தயாரித்தளித்த தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆதரவுடன் சிறப்படைந்துள்ளது […]
அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு சிறப்பாக நிறைவடைந்துள்ளது.

பிரான்சுநாட்டில் முதன்முதலாக அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 07.06.2025 சனிக்கிழமை பொண்டி நகரில் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. மாணவர்கள் உற்சாகமாக தேர்வு எழுதினர். மாணவர்களின் புலன்மொழியாற்றலை மேம்படுத்தும் நோக்கோடு கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுத்தாற்றலை மதிப்பிடும் எழுத்துத்தேர்வு என வளர்தமிழ் 1 தொடக்கம் 12 வரையான வகுப்புகளுக்கான மதிப்பீட்டுத்தாள்களைத் தயாரித்தளித்த அனைத்துலக தaமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆதரவுடன் சிறப்படைந்துள்ளது இத்தேர்வு.தேர்வினை மேற்பார்வை செய்ய அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் […]
பிரான்சு செவ்ரோன் நகரில் இடம்பெற்ற மே 18 தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் மே 18 பிரான்சில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு செவ்ரோன் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுக்கல்லின் முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு மற்றும் செவ்ரோன் பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. பொதுச்சுடரைத் தொடர்ந்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்காலில் உயிர்கொடுத்தவர்களின் உறவுகள் உள்ளிட்ட அனைவரும் நினைவுச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். நிகழ்வில் மாநகரமுதல்வர்,துணைமுதல்வர்கள், மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பிரான்சு […]
பிரான்சில் ஆரம்பமாகும் மே18 பேரணி

பிரான்சு, பாரிசு லாச்சப்பல் தமிழர் வர்த்தக நிலையங்கள் முன்பாக மே 18 கவனயீர்ப்பு பதாகைகள்!

இன்று 17.05.2025 சனிக்கிழமை பிரான்சு, பாரிசு லாச்சப்பல் தமிழர் வர்த்தக நிலையங்கள் முன்பாக மே 18 முள்ளிவாய்க்கால் 16 ஆம் ஆண்டினை நினைவில் ஏந்தி அதன் அடையாள சின்னத்தைத் தாங்கிய பதாகைகளை வைத்து கவனயீர்ப்பு நினைவேந்தப்படுகிறது. .மே18 அன்று மதியம் 13.30 மணிக்கு இன உணர்வு கொண்ட தமிழ் வர்த்தகர்கள் தமது கடைகளை மூடி நீதிக்கான பேரணியில் பங்குபற்றவும் உள்ளனர்.
கேளின் மாநகரில், தமிழ் மொழிக்கான ஒரு திருவிழா தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை விழா – 2025

யேர்மன் நாட்டில் புகழ்பெற்ற நறுமணநீர் நகர் கேளின் மாநகரில், தமிழ் மொழிக்கான ஒரு திருவிழாவைப் பெருவிழாவாகப் பேரவை விழா – 2025 இனை மே மாதம் 3ம் நாள் நடத்திச் சிறப்பித்துள்ளனர் யேர்மன் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையினர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள். மண்டப வாயிலில் மலர்க்கோலம் இடப்பட்டு, மேசை மீது பித்தளையாலான சிலைகள், நிறைகுடம், விளக்குகள் எனப் பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டு, மலர்களும் பழங்களும் அலங்கரிக்கத் தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றி நின்றது […]
பிரான்சில் முள்ளிவாய்க்கால் அவலத்தை கண்முன் கொண்டுவந்த இளையோர்கள்!

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு அரசியல் பிரிவு இளையோர், தமிழ் இளையோர் அமைப்பினருடன் இணைந்து மே 18 தமிழின அழிப்பின் 16 ஆம் ஆண்டினை முன்னிட்டு “தமிழின அழிப்பின் தடயங்கள் காட்சிப்படுத்தல்” என்னும் தொனிப் பொருளில் முள்ளிவாய்க்கால் அவலங்களை கண்முன் நிறுத்தியிருந்தனர். இன்று– 17 மே 2025 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு பாரிஸ் நகரில் ( 76, rue saint maur 75011 Paris) குறித்த காட்சிப்படுத்தல் ஆரம்பமாகி இருந்தது. சிறீலங்கா சுதந்திரமடைந்ததன் […]
துருக்கியை புறக்கணிக்க இந்தியாவில் வலுக்கும் குரல்கள் – நிலவரம் எப்படி மாறுகிறது?

துருக்கிக்கு பயணம் மேற்கொள்வதை புறக்கணிக்க வேண்டும் என இந்தியாவில் தொடங்கிய பொதுக் கோரிக்கைகள் தற்போது விரிவடைந்துள்ளது. துருக்கிய வணிக நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் உள்ள தொடர்புகளையும் இந்தியா துண்டித்து வருகிறது. சமீபத்திய இந்தியா – பாகிஸ்தான் சண்டையின் போது பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, ராஜ்ஜீய உறவுகள் பதற்றமடைந்துள்ளன. தேசிய பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து, துருக்கிய நிறுவனமான செலிபி, இந்திய விமான நிலையங்களில் செயல்படுவதற்கு இந்தியா தடை விதித்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை […]
புளோரிடா விமான நிலையத்தில் தீ விபத்து

அமெரிக்காவில் புளோரிடா விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க விமான நிலையங்களில் ஒன்றான புளோரிடா ஜாக்சன்வில்லா சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீ அங்கிருந்த ஏனைய 50க்கும் மேற்பட்ட வாகனங்களிலும் பரவியத்துடன் முதல் தளத்தில் பற்றிய தீ, ஏனைய தளங்களிலும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்தை அடுத்து உடனடியாக விமான நிலையம் மூடப்பட்டதுடான் தீ விபத்தின் எதிரொலியாக 30க்கும் […]