சினிமா பாணியில் அசத்தலாக வெளியாகி இருக்கும் ஒரு திருமண ஆல்பம் .பார்த்தா அசந்து போய்விடுவீங்க …

தற்போது சினிமாவுக்கு இணையாக திருமண அல்ப போட்டோ (Photo ) ஒளிப்பதிவு(video) சூட் ஆல்பங்கள் வெளியாகி வருகின்றது .புது புது யுத்திகளை பயன்படுத்தி புகைப்பட கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர் .இவ்வாறு வெளிவரும் சில பதிவுகள் பார்க்கும் பலரையும் மெய்சிலிர்க்க வைத்து விடும் .இப்போது சினிமா பாணியில் அசத்தலாக ஒரு திருமண ஆல்பம் வெளியாகி வைரலாகி வருகின்றது . பிரான்ஸை சேர்ந்த திருமண ஒளிப்பதிவு ஆல்பம் தான் அது .Tone Studio எனும் YOUTUBE வலையொளியில் […]
ஆப்கன் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 800-ஐ தாண்டியது – ஐ.நா. அமைப்பு கூறுவது என்ன?

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 800 பேர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது. 6.0 அளவிலான இந்த நிலநடுக்கத்தால் ஆப்கானின் 4 மாகாணங்களில் குறைந்தது 800 பேர் மரணமடைந்திருப்பார்கள் என ஐக்கிய நாடுகள் அவையின் மனிதாபிமான விவகாரங்களின்ஒருங்கிணைப்பு அலுவலகம் (UN Ocha) கூறியுள்ளது. குறைந்தபட்சம் 2,000 பேர் காயமடைந்திருக்கலாம், என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் தொலைதூர மலைப்பிரதேசங்களில் இருக்கலாம் என கூறுகிறது. இந்த பகுதிகளுக்கான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அணுகுவதற்கு கடினமாக இருப்பதாகவும் அந்த அமைப்பு […]
”ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால்..” – இந்தியா, சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

ரஷ்யாவிடமிருந்து இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய்யை வாங்கி வருகின்றன. இதன்மூலம், உக்ரைன் போரை ரஷ்யா மூன்று ஆண்டுகளாகச் சமாளித்து வருகிறது. இது, அமெரிக்காவிற்குப் பிடிக்காததால் அந்த நாடு ரஷ்யாவை மறைமுகமாக எச்சரித்து வருகிறது. தவிர, ரஷ்யாவின் ஏற்றுமதிகளைப் பெறுபவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது, ரஷ்ய ஏற்றுமதிகளைப் பெறும் இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மீது 100% இரண்டாம் நிலை வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார். ஆயினும், தற்காலிகமாக […]
எதிர்கால போர்களுக்காக சிறுவர்களை ராணுவ பயிற்சி கொடுத்து தயார் படுத்தி வருகிறது ரஷ்யா.

ராணுவ வீரர்கள் பற்றாக்குறையால் எதிர்கால போர்களுக்காக சிறுவர்களை ராணுவ பயிற்சி கொடுத்து தயார் படுத்தி வருகிறது ரஷ்யா. ரஷ்யாவில் பதின் வயதில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்படுவது கவனம் ஈர்ப்பதாக உள்ளது. உண்மையான துப்பாக்கிகளை கொண்டு துப்பாக்கி சுடும் பயிற்சி, கையெறி குண்டு வீசுவது ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன, இது தவிர ராணுவத்தினருக்கான உடற்பயிற்சிகளும் தற்போதே தரப்படுகின்றன. உக்ரைனுடன் 3 ஆண்டுகளாக போராடி வரும் ரஷ்யா ராணுவ வீரர்கள் பற்றாக்குறையால் திணறி வருகிறது. தனியார் […]
உக்ரைன் தனது சுதந்திரத்திற்காக தொடர்ந்து போராடும்

உக்ரைன் தனது சுதந்திரத்திற்காக தொடர்ந்து போராடும் என்று அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நமக்கு ஒரு நீதியான அமைதி தேவை, நமது எதிர்காலத்தை நாம் மட்டுமே தீர்மானிக்கும் ஒரு அமைதி என்று அவர் கூறியுள்ளார். மேலும், உக்ரைன் ஒரு பாதிக்கப்பட்ட நாடு அல்ல, அது ஒரு போராளி நாடு என்றும் அவர் பெருமிதம் கொண்டுள்ளார். உக்ரைன் இன்னும் வெற்றி பெறவில்லை, ஆனால் அது நிச்சயமாக தோற்காது எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உக்ரைன் ரஷ்ய மின்சாரம் மற்றும் […]
ஜெலன்ஸ்கி – ட்ரம்ப் சந்திப்பு.. புதினுக்கு மெலனியா கடிதம்.. உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், உலக நாடுகள் உற்றுநோக்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் […]
பிரான்சில் இடம்பெற்ற செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடி நினைவேந்தல்!

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 19 ஆவது ஆண்டு நினைவுநாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தலும் பாரிசு பஸ்ரில் பகுதியில் இன்று (14.08.2025) வியாழக்கிழமை பிற்பகல்15.00 மணிக்கு இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் […]
டொரொண்டோவில் கடும் புயல் எச்சரிக்கை

டொரொண்டோ நகரத்திற்கு கடும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மதியம் வெளியிட்ட எச்சரிக்கையில், மழை, ஆலங்கட்டி மழை மற்றும் மரங்களையும் வாகனங்களையும் பாதிக்கக்கூடிய பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. மெதுவாக நகரும் மழை மற்றும் இடியுடன் கூடிய மேகங்கள், இவ்வேளையில் கனமழையை கொண்டுவந்திருக்கின்றன. ஆலங்கட்டி தர மற்றும் பலத்த காற்று வீசுவதற்கும் வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் 50 மில்லிமீட்டர் […]
பிரான்சில் நடைபெற்ற கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வும் “தேசத்தின் குரல்” சிலைக்கான நினைவுக்கல் நாட்டும் நிகழ்வும்

தமிழீழ மக்களின் விடுதலைக்காக இராஜதந்திர ரீதியில் பெரும் பங்களிப்புச் செய்த மூத்த இராஜதந்திரியாகவும் தமிழீழ மக்களுக்கான தலைமை அமைதிப் பேச்சுவார்த்தையாளராகவும் தமிழீழ மக்களின் அரசியல் குரலாக அவர் உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்தவர் “தேசத்தின் குரல்” கலாநிதி.அன்ரன் பாலசிங்கம் அவர்கள் . இவருடைய நினைவாக பிரான்சின் பாரிஸ் புறநகர்களின் ஒன்றான bondy என்ற நகரில் உள்ள நகரபூங்காவான Parc de la Mare à la Veuve கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிலையை நிறுவுவதற்கான அனுமதியை […]
டொனால்டு ட்ரம்புவுக்கும் எலான் மஸ்கிற்கும் இடையே மோதல்

அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்புவுக்கும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்கிற்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக ட்ரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இப்போது மசோதாவை எதிர்த்த சில சட்டமியற்றுபவர்கள், மசோதாவுக்கு வாக்களித்த குடியரசுக் கட்சியினருக்கு எதிராக நிதி திரட்டும்படி மஸ்க்கிடம் கோரியிருந்தனர். இதையடுத்து, […]