மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நடவடிக்கை அரசியல் ரீதியானது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நடவடிக்கை அரசியல் ரீதியானது என பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி தெரிவித்துள்ளார். இலங்கையில் உயர்நிலை பிரபுக்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தல் அல்லது நடைமுறைப்படுத்தாதிருத்தல் இரண்டுமே அரசியல் ரீதியான தீர்மானங்களின் அடிப்படையிலானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை மூடிமறைக்க வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒட்டு மொத்த செயன்முறையும் அரசியல் ரீதியானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிணை […]

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசி வேண்டி விகாரையில் விசேட பூஜை வழிபாடுகள்

தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசி வேண்டி கொள்ளுப்பிட்டி வாலுகாராம விகாரையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. நேற்று பிற்பகல் இந்த பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாகத் தெரிவித்து சிஐடியினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலைக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், ரணிலின் கைதுக்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் பரப்பில் பல்வேறு கருத்தாடல்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், வைத்தியசாலையில் […]

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் பணி

செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் பணி ஆரம்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்பப்பாண மாவட்ட செயலகத்தின் கச்சேரி – நல்லூர் வீதியின் பக்கமாக கடவுச்சீட்டு அலுவலகத்திற்கென பிரத்தியேகமான கட்டிடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டிடத்தின் நிர்மாண வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதத்தில் இருந்து கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்று […]

சர்வதேச விசாரணை ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி

நீண்டு செல்லும் செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் அமைப்பினுடைய தலைவி யோகராசா கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட இருக்கிறது இந்த நிலையில் குறித்த போராட்டம் தொடர்பில் இன்று (22) கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் […]

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ஒழிப்பதற்கான வர்த்தமானி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ஒழிப்பதற்கான வர்த்தமானி அடுத்த மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேர்த் அறிவித்துள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிப்பது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழுவின் அறிக்கை அடுத்த மாத தொடக்கம் வரை காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்க வலுவான புதிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் விஜித வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடு […]

செல்வச் சந்நிதியான் மகோற்சவம் – விசேட அறிவிப்பு

வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் சனிக்கிழமை மதியம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 06ஆம் திகதி காலை தேர் திருவிழாவும் மறுநாள் தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் , ஆலய சூழலில் கடைப்பிடிக்க வேண்டிய பொதுச்சுகாதாரம் சார்ந்த பொது அறிவுறுத்தல்களை வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற பொதுச்சுகாதார பரிசோதகர் விடுத்துள்ளார். அவையாவன, 1. உணவு கையாளும் நிலையங்கள் (உணவகங்கள், இனிப்பு கடைகள்,மிக்சர் கடைகள்,ஐஸ்கிறீம் கடைகள்,கருஞ்சுண்டல்,தும்புமிட்டாய்,ஏனையவை) தத்தமது உள்ளூராட்சி சபைகளின் […]

சதீஷ் கமகே மீண்டும் விளக்கமறியலில்

பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின் பதில் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பல இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இரு குழுக்களுக்கு இடையே மோதல்-கொல்லப்பட்ட இளைஞன்

புத்தளம், கல்பிட்டியில் இரு குழுக்களுக்கு இடையே நேற்று இரவு ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளுக்கமைய, உயிரிழந்தவர் உட்பட 5 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் தனிப்பட்ட தகராறு காரணமாக மோதிக்கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த கல்பிட்டியை சேர்ந்த 37 வயதுடைய நபராகும். குறித்த நபர் கல்பிட்டி ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். சடலம் சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் […]

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.   இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.   மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.   மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.   மு.ப. 11.30 – பி.ப. 5.00 (i) பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் […]

தபால் ஊழியர்கள் ஆரம்பித்த நாடளாவிய வேலைநிறுத்தம் இன்றும் தொடரும்

தபால் ஊழியர்கள் ஆரம்பித்த நாடளாவிய வேலைநிறுத்தம் இன்றும் (19) தொடரும் என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. 19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் மாலை (17) ஆரம்பிக்கப்பட்ட வெலைநிறுத்தம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். தங்கள் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் கிடைக்கும் வரை வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்றும், இன்று தங்கள் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை கையளிக்க உள்ளதாகவும் சிந்தக பண்டார தெரிவித்தார். எனினும், […]