வடக்கில் சுவீகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படும்: யாழ். வந்த ஜனாதிபதி அநுர உறுதி

வடக்கில் கடந்த போரின் போது பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டுக்காகக் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகளில், விடுவிக்கக்கூடிய அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார். யாழ். மயிலிட்டி கடற்றொழில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் இன்றைய(01.09.2025) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். கடற்றொழில் சமூகத்துக்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசின் பொறுப்பு என்றும், வடக்கில் கடற்றொழில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு […]
யாழில் பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபா மோசடி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்ட நபருக்கு எதிராக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், தெல்லிப்பழை – மாவிட்டபுரம் பகுதியைச் சேர்ந்த நபரே சங்கானையை சேர்ந்த ஒருவரை பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி 13 இலட்சம் ரூபாவை பெற்றுள்ளார். சந்தேகநபர் தலைமறைவு இந்நிலையில், அவரை பிரான்ஸிற்கு அனுப்பாத நிலையில் 3 இலட்சம் ரூபாவை திருப்பி கொடுத்ததுடன் 10 இலட்சம் […]
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவின் புத்தகத்துக்கு தடை

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட எழுதிய சுயசரிதை புத்தகம், பிரித்தானியாவில் Amazon விற்பனை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (International Truth and Justice Project – ITJP) எனும் அமைப்பின் கோரிக்கைக்கு அமைய எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. சுயசரிதை புத்தகம் கரன்னாகொடவின் புத்தக விற்பனை பிரித்தானிய தடைக் சட்டங்களை மீறும் எனவும், தடைக்குட்பட்ட ஒருவருக்கு காப்புரிமை உள்ளிட்ட வளங்களை வழங்குவது குற்றமாக கருதப்படும் எனவும் சர்வதேச உண்மை […]
செம்மணி மனித புதைகுழி தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் எவ்வித மாற்றமும் இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார். இந்த விசாரணைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்திருந்த ஒருவர் உயிரிழப்பு

விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்திருந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கடந்த 27ஆம் திகதி இரவு அநுராதபுரம் மாவட்டத்தின் கெப்பிற்றிக்கொல்லாவ பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த கப்ரக வாகனத்தை அந்த பகுதியில் கடமையில் இருந்த விசேட அதிரடிப்படையினர் வழிமறித்துள்ளனர் இதன்போது, குறித்த வாகனம் நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து விசேட அதிரடிப் படையினரால் அந்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்திருந்தனர். காயமடைந்த […]
இஷாரா செவ்வந்தி டுபாய் நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி டுபாய் நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினர் மீது குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்போதே, இஷாரா செவ்வந்தி டுபாய் நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இதுவரை நடைபெற்ற விசாரணையில் கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டது தொடர்பாக பல உண்மைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை, கெஹல்பத்தர […]
கச்சத்தீவை மக்களுக்காகப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன்-ஜனாதிபதி அநுர

கச்சத்தீவை மக்களுக்காகப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் என்றும், எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர் இந்த விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார். கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்டுக் கொடுக்குமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இறுதியாக மதுரையில் நடந்த மாநாட்டில் உரையாற்றும் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக உரையாற்றியுள்ள ஜனாதிபதி அநுர, கச்சத்தீவை […]
செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் மீள ஆரம்பம்
யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்றையதினம்(25) ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி அகழ்வு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கவிருந்த நிலையில் பிற்போடப்பட்டிருந்த நிலையில், குறித்த அகழ்வு பணிகளே இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழிகளில் முதல் கட்டமாக 9 நாளும் இரண்டாம் கட்டத்தில் 45 நாள் அகழ்வு செய்ய தீர்மானிக்கப்பட்டு இதுவரை 32 நாளும் என மொத்தமாக 41 […]
யாழ் தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று கொடியேற்றம்

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் (Thellippalai Sri Durga Devi Temple) வருடாந்த மகோற்சவம் இன்று (26) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மகோற்சவ பெருவிழாவில் இன்று காலையில் இருந்து அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான், துர்க்கை அம்மன், முருகப்பெருமான் ஆகியோருக்கு விசேட பூஜைகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் இருந்து மூர்த்திகள் கொடிக் கம்பத்திற்கு […]
புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கு : நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 6ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த மேன்முறையீட்டு மனுக்கள் தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, நீதிபதிகள் அச்சல வெங்கப்புலி, சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. வழக்கு விசாரணையின் போது, மேன்முறையீட்டாளர்கள் சார்பில் முன்னியான வழக்கறிஞர், […]