சென்னையில் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த மழை : எதிர்பாராத வானிலை நிகழ்வுகளுக்கு என்ன காரணம்?

சனிக்கிழமையன்று இரவில் சென்னையின் மணலியிலும் அதனை ஒட்டியுள்ள சில பகுதிகளிலும் திடீரென பெரும் மழைபெய்திருக்கிறது. மணலியில் பெய்த மழைக்கு மேகவெடிப்பே காரணம் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. என்ன நடந்தது? சனிக்கிழமையன்று இரவில் சென்னை நகரின் பல பகுதிகளில் திடீரென மழை கொட்டித் தீர்த்தது. மணலி போன்ற பகுதிகளில் மேகவெடிப்பு நடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென் மேற்குப் பருவமழை இந்தியா முழுவதும் தற்போது தீவிரமடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தென் மேற்குப் பருவமழை காலகட்டத்தில் […]
சீன மண்ணில் பிரதமர் மோடி… எகிறும் எதிர்பார்ப்பு…

ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க 7 ஆண்டுகளுக்கு பிறகு சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு முறைப் பயணமாக 4 நாட்கள் ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். ஜப்பானில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி சீனா சென்றார். தியான்ஜின் நகரில் பிரதமர் மோடிக்கு சீன மற்றும் இந்திய உயரதிகாரிகள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் கூடிய […]
பாகிஸ்தானும் ட்ரம்ப்பின் கூற்றுக்கு மறுப்பு

ஓபரேஷன் சிந்தூரில் போர்நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் விளக்கமளித்துள்ளார். கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி நடைபெற்ற பஹல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மே 7ஆம் திகதி ஓபரேஷன் சிந்தூர் என்ற இராணுவ நடவடிக்கையை, இந்தியா பாகிஸ்தானில் மேற்கொண்டது. இதில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் தாக்கியழிக்கப்பட்டது. இதன் காரணமாக, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இரு நாடுகளும், ட்ரோன் மற்றும் விமானங்கள் மூலமாக தாக்கிக்கொண்டன. 4 நாட்களுக்கு […]
இந்தியாவிற்கு எதிரான ட்ரம்பின் வரி: கடுமையாக எதிர்க்கும் சீனா

இந்தியாவிற்கு (India) எதிரான அமெரிக்க (United States) வரியை எதிர்த்து நிற்கப்போவதாக சீனா (China) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இந்தியாவுக்கு விதித்திருக்கும் 50 சதவீத வரியை எதிர்த்து நிற்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இந்தியாவுக்கான சீன தூதர் ஸு ஃபெய்ஹோங் (Xu Feihong) தெரிவித்துள்ளார். சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இரண்டு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், […]
மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று ரயில் மறியல்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று (19) தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் மாலை 4:00 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.. மீனவர்களுடன் ராமேஸ்வரம் வட்டார ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ராஜ மணோகரன் தலைமையில் பேச்சுவார்த்தை ஒன்று நேற்று (18) நடைபெற்றது. ஆனால் […]
சதாசிவ_பண்டாரத்தார் அவர்களின் 133 ஆம் ஆண்டு அவதார நன்னாள் -16.09.2025

ஆதித்த கரிகாலசோழன் படுகொலை மர்மத்தை உடைத்த காட்டுமன்னார்கோயில் – உடையார்குடி கல்வெட்டை கண்டறிந்து தமிழ் உலகிற்கு தந்தவர்…! ஏழத்தாழ 8000 தமிழ் கல்வெட்டுகளை நேரடியாக படித்து ஆராய்ந்தவர்…! சோழ மன்னர்களின் முழுமையான வரலாற்றினை எழுதி வெளியிட்ட முன்னவர்…! வீரசோழப் பேரரசு மீண்டு எழ வழிவகுத்த #திருப்புறம்பியம்_பெரும்போர் என வரலாற்றாளர்களால் போற்றப்படும், அதி முக்கிய வரலாற்று போர் நடந்த திருப்புறம்பியம் கிராமத்தில் தோன்றியவர். “ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் உண்மை வரலாறு அதன் தாய் மொழியிலேயே எழுதப்படுதல் அவசியம்” […]
தூய்மைப்பணியாளர்கள் பணிநிரந்தரம் | திருமா, அதியமான் கருத்துக்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு – ஏன்?

தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது என்று திருமாவளவன் மற்றும் அதியமான் கூறியுள்ள நிலையில் அதற்கு இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் இதற்கு எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள். தூய்மைப்பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக் கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் ஆகியோர் பேசியிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. தூய்மைப்பணியாளார்களை பணிநிரந்தரம் செய்யும்போது தூய்மைப்பணியை அதிகமாக செய்யும் ஒடுக்கப்பட்ட மக்களே பொருளாதார ரீதியாக முன்னிலைக்கு வரமுடியும். […]
தவெக மாநாட்டுக்கு வருபவர்கள் கடைபிடிக்க வேண்டியது என்ன? காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு..

மதுரையில் வியாழக்கிழமை நடைபெறும் தவெக மாநாட்டுக்கு வரும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் வருவதை தவிர்க்க வேண்டும் என காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழித்தடம் குறித்தும் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி வழியாக மாநாட்டு திடலில் உள்ள பார்க்கிங் 1க்கு வர வேண்டும். தூத்துக்குடி, விருதுநகரில் இருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, காரியாபட்டி வழியாக […]
கல்விச் செயல்பாடுகள் குறித்த கொள்கை முடிவுகள் தான்தோன்றித் தனமாய் அறிவிப்பது சரியாக இருக்காது-ஏர் மகாராசன்

கல்விச் செயல்பாடுகள் குறித்த கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு முன்பாக, ஆசிரியர்களிடமோ அல்லது கல்வியாளர்களிடமோ கருத்தேதும் கேட்காமல் தான்தோன்றித் தனமாய் அறிவிப்பது சரியாக இருக்காது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. * வகுப்பறைகளில் ப வடிவில் மாணவர்களை அமர வைப்பது என்னும் முடிவு குறித்து ஆதரித்தும் எதிர்த்தும் பதிவுகள் நிறைய. கடைசி வரிசையில் அமர்கிறவர்கள் எல்லாம் கல்வியில் பின்தங்கியவர்கள் என்று பொருளாகாது என்கிறார் ஷோபனா. இருக்கலாம். ஆனால், last benchers என்பது உலகளாவிய விஷயம். மாணவர்களை ஆசிரியரே கடைசி […]
தவெக நடத்திய ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டு அரசியலில் மிக முக்கியமான ஒன்று.. ஏன்?

திமுக ஆட்சி ‘சாரி மா மாடல் ஆட்சி’ ஆகிவிட்டதாக விமர்சித்துள்ள தவெக தலைவர் விஜய், தவெகவுக்கு அஞ்சி ஒன்றிய ஆட்சிக்கு பின்னால் திமுக ஒளிந்துகொள்வதாக சாடியுள்ளார். காவல் நிலைய மரணங்களை கண்டித்து சென்னையில் தவெக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய விஜய், “இளைஞர் அஜித்குமார் குடும்பத்துக்கு கொடுத்த நிவாரணம் போல, இதே ஆட்சியில் நிகழ்ந்த 24 இளைஞர்களின் குடும்பங்களுக்கும் நிவாரணம் கொடுங்கள். சாத்தான்குளம் சம்பவத்தை சிபிஐ-க்கு மாற்றியபோது, அது தமிழ்நாட்டு காவல்துறைக்கு அவமானம் என்றீர்கள். இன்று நீங்கள் […]