மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

சினிமா பாணியில் அசத்தலாக வெளியாகி இருக்கும் ஒரு திருமண ஆல்பம் .பார்த்தா அசந்து போய்விடுவீங்க …

தற்போது சினிமாவுக்கு இணையாக திருமண அல்ப போட்டோ (Photo ) ஒளிப்பதிவு(video) சூட் ஆல்பங்கள் வெளியாகி வருகின்றது .புது புது யுத்திகளை பயன்படுத்தி புகைப்பட கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர் .இவ்வாறு வெளிவரும் சில பதிவுகள் பார்க்கும் பலரையும் மெய்சிலிர்க்க வைத்து விடும் .இப்போது சினிமா பாணியில் அசத்தலாக ஒரு திருமண ஆல்பம் வெளியாகி வைரலாகி வருகின்றது . பிரான்ஸை சேர்ந்த திருமண ஒளிப்பதிவு ஆல்பம் தான் அது .Tone Studio எனும் YOUTUBE வலையொளியில் […]

சென்னையில் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த மழை : எதிர்பாராத வானிலை நிகழ்வுகளுக்கு என்ன காரணம்?

சனிக்கிழமையன்று இரவில் சென்னையின் மணலியிலும் அதனை ஒட்டியுள்ள சில பகுதிகளிலும் திடீரென பெரும் மழைபெய்திருக்கிறது. மணலியில் பெய்த மழைக்கு மேகவெடிப்பே காரணம் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. என்ன நடந்தது? சனிக்கிழமையன்று இரவில் சென்னை நகரின் பல பகுதிகளில் திடீரென மழை கொட்டித் தீர்த்தது. மணலி போன்ற பகுதிகளில் மேகவெடிப்பு நடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென் மேற்குப் பருவமழை இந்தியா முழுவதும் தற்போது தீவிரமடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தென் மேற்குப் பருவமழை காலகட்டத்தில் […]

ஆப்கன் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 800-ஐ தாண்டியது – ஐ.நா. அமைப்பு கூறுவது என்ன?

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 800 பேர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது. 6.0 அளவிலான இந்த நிலநடுக்கத்தால் ஆப்கானின் 4 மாகாணங்களில் குறைந்தது 800 பேர் மரணமடைந்திருப்பார்கள் என ஐக்கிய நாடுகள் அவையின் மனிதாபிமான விவகாரங்களின்ஒருங்கிணைப்பு அலுவலகம் (UN Ocha) கூறியுள்ளது. குறைந்தபட்சம் 2,000 பேர் காயமடைந்திருக்கலாம், என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் தொலைதூர மலைப்பிரதேசங்களில் இருக்கலாம் என கூறுகிறது. இந்த பகுதிகளுக்கான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அணுகுவதற்கு கடினமாக இருப்பதாகவும் அந்த அமைப்பு […]

”ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால்..” – இந்தியா, சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

ரஷ்யாவிடமிருந்து இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய்யை வாங்கி வருகின்றன. இதன்மூலம், உக்ரைன் போரை ரஷ்யா மூன்று ஆண்டுகளாகச் சமாளித்து வருகிறது. இது, அமெரிக்காவிற்குப் பிடிக்காததால் அந்த நாடு ரஷ்யாவை மறைமுகமாக எச்சரித்து வருகிறது. தவிர, ரஷ்யாவின் ஏற்றுமதிகளைப் பெறுபவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது, ரஷ்ய ஏற்றுமதிகளைப் பெறும் இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மீது 100% இரண்டாம் நிலை வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார். ஆயினும், தற்காலிகமாக […]

சீன மண்ணில் பிரதமர் மோடி… எகிறும் எதிர்பார்ப்பு…

ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க 7 ஆண்டுகளுக்கு பிறகு சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு முறைப் பயணமாக 4 நாட்கள் ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். ஜப்பானில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி சீனா சென்றார். தியான்ஜின் நகரில் பிரதமர் மோடிக்கு சீன மற்றும் இந்திய உயரதிகாரிகள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் கூடிய […]

வடக்கில் சுவீகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படும்: யாழ். வந்த ஜனாதிபதி அநுர உறுதி

வடக்கில் கடந்த போரின் போது பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டுக்காகக் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகளில், விடுவிக்கக்கூடிய அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார். யாழ். மயிலிட்டி கடற்றொழில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் இன்றைய(01.09.2025) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.   கடற்றொழில் சமூகத்துக்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசின் பொறுப்பு என்றும், வடக்கில் கடற்றொழில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு […]

யாழில் பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபா மோசடி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்ட நபருக்கு எதிராக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், தெல்லிப்பழை – மாவிட்டபுரம் பகுதியைச் சேர்ந்த நபரே சங்கானையை சேர்ந்த ஒருவரை பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி 13 இலட்சம் ரூபாவை பெற்றுள்ளார். சந்தேகநபர் தலைமறைவு இந்நிலையில், அவரை பிரான்ஸிற்கு அனுப்பாத நிலையில் 3 இலட்சம் ரூபாவை திருப்பி கொடுத்ததுடன் 10 இலட்சம் […]

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவின் புத்தகத்துக்கு தடை

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட எழுதிய சுயசரிதை புத்தகம், பிரித்தானியாவில் Amazon விற்பனை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (International Truth and Justice Project – ITJP) எனும் அமைப்பின் கோரிக்கைக்கு அமைய எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. சுயசரிதை புத்தகம்   கரன்னாகொடவின் புத்தக விற்பனை பிரித்தானிய தடைக் சட்டங்களை மீறும் எனவும், தடைக்குட்பட்ட ஒருவருக்கு காப்புரிமை உள்ளிட்ட வளங்களை வழங்குவது குற்றமாக கருதப்படும் எனவும் சர்வதேச உண்மை […]

எதிர்கால போர்களுக்காக சிறுவர்களை ராணுவ பயிற்சி கொடுத்து தயார் படுத்தி வருகிறது ரஷ்யா.

ராணுவ வீரர்கள் பற்றாக்குறையால் எதிர்கால போர்களுக்காக சிறுவர்களை ராணுவ பயிற்சி கொடுத்து தயார் படுத்தி வருகிறது ரஷ்யா. ரஷ்யாவில் பதின் வயதில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்படுவது கவனம் ஈர்ப்பதாக உள்ளது. உண்மையான துப்பாக்கிகளை கொண்டு துப்பாக்கி சுடும் பயிற்சி, கையெறி குண்டு வீசுவது ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன, இது தவிர ராணுவத்தினருக்கான உடற்பயிற்சிகளும் தற்போதே தரப்படுகின்றன. உக்ரைனுடன் 3 ஆண்டுகளாக போராடி வரும் ரஷ்யா ராணுவ வீரர்கள் பற்றாக்குறையால் திணறி வருகிறது. தனியார் […]

செம்மணி மனித புதைகுழி தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் எவ்வித மாற்றமும் இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு  விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி  மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார். இந்த விசாரணைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.