மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

கல்விச் செயல்பாடுகள் குறித்த கொள்கை முடிவுகள் தான்தோன்றித் தனமாய் அறிவிப்பது சரியாக இருக்காது-ஏர் மகாராசன்

கல்விச் செயல்பாடுகள் குறித்த கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு முன்பாக, ஆசிரியர்களிடமோ அல்லது கல்வியாளர்களிடமோ கருத்தேதும் கேட்காமல் தான்தோன்றித் தனமாய் அறிவிப்பது சரியாக இருக்காது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. * வகுப்பறைகளில் ப வடிவில் மாணவர்களை அமர வைப்பது என்னும் முடிவு குறித்து ஆதரித்தும் எதிர்த்தும் பதிவுகள் நிறைய. கடைசி வரிசையில் அமர்கிறவர்கள் எல்லாம் கல்வியில் பின்தங்கியவர்கள் என்று பொருளாகாது என்கிறார் ஷோபனா. இருக்கலாம். ஆனால், last benchers என்பது உலகளாவிய விஷயம். மாணவர்களை ஆசிரியரே கடைசி […]

இரண்டாம் இடத்தை தனதாக்கிய யாழ்ப்பாணத்தின் மைந்தன் புஷாந்தனை வாழ்த்துவோம்

ஜப்பானில் இடம்பெற்ற ஆசிய, பசுபிக் மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்குடையிலான பளுதூக்கல் போட்டியில் 832.5 kg (Over Roll) பளுவைத் தூக்கி இலங்கைக்கான புதிய சாதனையுடன் இரண்டாம் இடத்தை தனதாக்கிய யாழ்ப்பாணத்தின் மைந்தன் புஷாந்தனை வாழ்த்துவோம்

தவெக நடத்திய ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டு அரசியலில் மிக முக்கியமான ஒன்று.. ஏன்?

திமுக ஆட்சி ‘சாரி மா மாடல் ஆட்சி’ ஆகிவிட்டதாக விமர்சித்துள்ள தவெக தலைவர் விஜய், தவெகவுக்கு அஞ்சி ஒன்றிய ஆட்சிக்கு பின்னால் திமுக ஒளிந்துகொள்வதாக சாடியுள்ளார். காவல் நிலைய மரணங்களை கண்டித்து சென்னையில் தவெக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய விஜய், “இளைஞர் அஜித்குமார் குடும்பத்துக்கு கொடுத்த நிவாரணம் போல, இதே ஆட்சியில் நிகழ்ந்த 24 இளைஞர்களின் குடும்பங்களுக்கும் நிவாரணம் கொடுங்கள். சாத்தான்குளம் சம்பவத்தை சிபிஐ-க்கு மாற்றியபோது, அது தமிழ்நாட்டு காவல்துறைக்கு அவமானம் என்றீர்கள். இன்று நீங்கள் […]

டொரொண்டோவில் கடும் புயல் எச்சரிக்கை

டொரொண்டோ நகரத்திற்கு கடும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மதியம் வெளியிட்ட எச்சரிக்கையில், மழை, ஆலங்கட்டி மழை மற்றும் மரங்களையும் வாகனங்களையும் பாதிக்கக்கூடிய பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. மெதுவாக நகரும் மழை மற்றும் இடியுடன் கூடிய மேகங்கள், இவ்வேளையில் கனமழையை கொண்டுவந்திருக்கின்றன.   ஆலங்கட்டி தர மற்றும் பலத்த காற்று வீசுவதற்கும் வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் 50 மில்லிமீட்டர் […]

அமெரிக்கா செல்லும் அநுரவின் குழு

அமெரிக்காவினால் இலங்கை ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத வரியை மேலும் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட, உயர்மட்டக் குழுவொன்று அமெரிக்காவுக்குப் புறப்பட உள்ளது. மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வர்த்தக அமைச்சின் செயலாளர் விமலேந்திரராஜா, ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மகிந்த சமரசிங்க ஆகியோர் இந்த குழுவில் இடம்பெறவுள்ளனர். இந்த முயற்சி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பிய வரி கடிதத்துக்கு பின்னர், வர்த்தக […]

பிரான்சில் நடைபெற்ற கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வும் “தேசத்தின் குரல்” சிலைக்கான நினைவுக்கல் நாட்டும் நிகழ்வும்

தமிழீழ மக்களின் விடுதலைக்காக இராஜதந்திர ரீதியில் பெரும் பங்களிப்புச் செய்த மூத்த இராஜதந்திரியாகவும் தமிழீழ மக்களுக்கான தலைமை அமைதிப் பேச்சுவார்த்தையாளராகவும் தமிழீழ மக்களின் அரசியல் குரலாக அவர் உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்தவர் “தேசத்தின் குரல்” கலாநிதி.அன்ரன் பாலசிங்கம் அவர்கள் . இவருடைய நினைவாக பிரான்சின் பாரிஸ் புறநகர்களின் ஒன்றான bondy என்ற நகரில் உள்ள நகரபூங்காவான Parc de la Mare à la Veuve கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிலையை நிறுவுவதற்கான அனுமதியை […]

யாழில் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது. நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நிர்வாகச் செயலாளர் எக்ஸ்.குலநாயகம் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மதுரையைக் குறிவைக்கும் பாஜக.. முக்கியமான இரண்டு தொகுதிகளுக்கு டார்கெட்?

மதுரை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை, தேனி, சிவகங்கை, மற்றும் நெல்லையை சேர்ந்த மண்டல தலைவர்கள் முதல் மாவட்ட பொதுச்செயலாளர்கள் வரையிலான பல்வேறு கட்ட நிர்வாகிகளைச் சந்திக்கிறார். அதுமட்டுமின்றி அதிமுக மூன்று முறை வெற்றி பெற்றுள்ள மதுரை மேற்கு தொகுதியில் பாஜக நிர்வாகிகளை அதிகளவில் அமித்ஷா சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார். குறிப்பாக மதுரை மேற்கு தொகுதியை சார்ந்த பாஜக துணைத்தலைவர் தமிழ்மணி, கலா, ராஜலட்சுமி உள்ளிட்டோரையும், மாநிலகக்குழு உறுப்பினர் மலைச்செல்வி, மாவட்ட செயலாளர்கள் மாலைக்கொடி, […]

டொனால்டு ட்ரம்புவுக்கும் எலான் மஸ்கிற்கும் இடையே மோதல்

அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்புவுக்கும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்கிற்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக ட்ரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இப்போது மசோதாவை எதிர்த்த சில சட்டமியற்றுபவர்கள், மசோதாவுக்கு வாக்களித்த குடியரசுக் கட்சியினருக்கு எதிராக நிதி திரட்டும்படி மஸ்க்கிடம் கோரியிருந்தனர். இதையடுத்து, […]

பிரான்சில் சிறப்படைந்த ரிரிஎன் தமிழ்ஒளியின் ‘ஊரகப் பேரொளி’ 2025 கிராமிய கலை

பிரான்சில் ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சி 6 வது தடவையாக நடாத்திய ‘ஊரகப் பேரொளி” கிராமிய கலை நடனப்போட்டி – 2025 கடந்த 01.06.2025; ஞாயிற்றுக்கிழமை ஒள்னேசுபுவா பகுதியில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது. பிரதம விருந்தினர், நடுவர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் இன்னியம் இசையுடன் அழைத்து வரப்பட்டனர். வரவேற்பு விளக்கினை பிரான்சு ரிரிஎன் இணைப்பாளர் திரு. ஜெயா , பிரான்சு கிளையின் செயற்பாட்டாளர் திருவாட்டி சுபா மோகன் ஆகியோர் ஏற்றி வைத்தனர். பின்னர் அகவணக்கம் […]