மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

ஊசி மூலம் போதைப் பொருள் ஏற்றியவர் யாழ்.சாவகச்சேரியில் ஆபத்தான நிலையில்!

யாழ். தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப் பொருளை ஊசி மூலம் உடலில் ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த இளைஞன் போதைப் பொருளை ஊசி மூலம் தொடர்ச்சியாக பாவிப்பவர் என தெரியவருகின்றது. ஆபத்தான நிலை இந்நிலையில் இளைஞன் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றிய நிலையில் திடீரென மயக்கமடைந்துள்ளார். பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகை ருக்மிணி விஜயகுமாரின் 23 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு.. டேக்ஸி டிரைவர் கைது!

கன்னட நடிகை ருக்மிணி விஜயகுமாரின் 23 லட்சம் மதிப்புள்ள பொருட்களைத் திருடிய நபரை பெங்களூரு காவல் துறையினர் கைது செய்தனர். என்ன நடந்தது? கன்னட நடிகையான ருக்மிணி விஜயகுமார் கம்பன் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள சென்றபோது, தனது கார் கதவை லாக் செய்யாமல் சென்றுள்ளார். அதை நோட்டமிட்ட முகமது என்ற நபர் ருக்மிணியின் காரில் இருந்த விலையுயர்ந்த ஹேண்ட் பேக், பர்ஸ், வைர மோதிரம், கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளார். நடிகை ருக்மிணி விஜயகுமார் இதுகுறித்து ருக்மிணி […]

4 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர்!

18 மசோதாக்கள் அனுப்பப்பட்டதில் நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார் . கடந்த மார்ச் 14 முதல் ஏப். 29 வரை நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர் என் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட நாட்களாக கவர்னரின் ஒப்புதலுக்காக காத்திருந்த நிலையில் இன்று 4 சட்ட திருத்த மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்திருக்கிறார். 4 மசோதாக்களையும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் […]

தூத்துக்குடி| கிணற்றுக்குள் மூழ்கிய ஆம்னி வேன்.. ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு!

தூத்துக்குடியின் சிந்தாமணிக்கும் – மீரான்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில், 8 பேர் பயணித்த ஆம்னி வேன் கிணற்றுக்குள் கவிழ்ந்தது. இதில் மூவர் தப்பி கரையேறிய நிலையில், ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் வேனிலேயே சிக்கியிருந்தனர். 5 பேர் உயிரிழப்பு.. தீயணைப்புத்துறையினர் 5 மணி நேரம் போராடி ஆம்னி வேனையும், அதில் சடலமாக இருந்த மோசஸ், வசந்தா, ரவி, ஹெத்சியா கிருபா ஆகியோரையும் மீட்டனர். பின்னர், கிணற்றிலிருந்து ஒன்றரை வயது குழந்தையையும் சடலமாக மீட்டனர்.