தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது என்று திருமாவளவன் மற்றும் அதியமான் கூறியுள்ள நிலையில் அதற்கு இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் இதற்கு எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள்.
தூய்மைப்பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக் கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் ஆகியோர் பேசியிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. தூய்மைப்பணியாளார்களை பணிநிரந்தரம் செய்யும்போது தூய்மைப்பணியை அதிகமாக செய்யும் ஒடுக்கப்பட்ட மக்களே பொருளாதார ரீதியாக முன்னிலைக்கு வரமுடியும். அப்படி இருக்கையில், ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை பிரதானமாக பேசும் இந்த இரு இயக்கங்களும் தூய்மைப்பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கூடாது என தூய்மைப்பணியாளர்களின் போராட்டத்தை நீர்த்துப் போகும்படியாக பேசியிருப்பதாக இடதுசாரி கட்சிகள் பல தரப்பினரும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், தூய்மைப்பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கூடாது எனப் பேசிய திருமாவளவன் மற்றும் அதியமான் குறித்து விமர்சித்து பேசியுள்ளார்.
தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்தும் திருமாவளவன், அதியமான் இருவரின் கருத்து குறித்தும் கருத்துக்கான விமர்சனங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்..