மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

தவெக நடத்திய ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டு அரசியலில் மிக முக்கியமான ஒன்று.. ஏன்?

திமுக ஆட்சி ‘சாரி மா மாடல் ஆட்சி’ ஆகிவிட்டதாக விமர்சித்துள்ள தவெக தலைவர் விஜய், தவெகவுக்கு அஞ்சி ஒன்றிய ஆட்சிக்கு பின்னால் திமுக ஒளிந்துகொள்வதாக சாடியுள்ளார். காவல் நிலைய மரணங்களை கண்டித்து சென்னையில் தவெக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய விஜய், “இளைஞர் அஜித்குமார் குடும்பத்துக்கு கொடுத்த நிவாரணம் போல, இதே ஆட்சியில் நிகழ்ந்த 24 இளைஞர்களின் குடும்பங்களுக்கும் நிவாரணம் கொடுங்கள். சாத்தான்குளம் சம்பவத்தை சிபிஐ-க்கு மாற்றியபோது, அது தமிழ்நாட்டு காவல்துறைக்கு அவமானம் என்றீர்கள். இன்று நீங்கள் உத்தரவிட்டிருப்பதற்கு பெயர் என்னங்க சார்? இப்போதும் அதே சிபிஐ-தானே? ஏன் நீங்கள் அங்கே போய் ஒளிந்து கொள்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

விஜயின் போர் முழக்கம்

காவல்நிலைய மரணங்களுக்காகவும், அவற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க வேண்டுமென்பதற்காகவும் விஜய் குரல் கொடுத்திருப்பது ஆரோக்கியமான அரசியலாகத்தான் பார்க்கிறேன்

தவெக நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “விஜயின் போர் முழக்கம் என்றுதான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். aggressive அரசியலை நோக்கி நகர்கிறார். காவல் நிலைய மரணங்கள் எந்த ஆட்சியில் நடந்தாலும் அது கண்டிக்கத்தக்கவைதான். சிவில் சமூகம் இதை எதிர்த்துதான் வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அது ஒரு கருப்பு ராஜ்ஜியம்.

விளம்பரங்கள்

வாழ்த்துமாலை

மரண அறிவித்தல்

Test Name of the Person

Test Place

Test Date